‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நம் முன்னோர்கள் சொன்ன பொன் எழுத்து வாக்கு.
ஆனால் இன்று செல்வம் உள்ளவர்களை கூட எதுவமே இல்லாதவர்களாய் ஆக்குவது நோய்கள் மட்டுமே…..
நம்மை சுற்றிலும் நோய்களின் தாக்குதலுக்கு இன்றைய மனித சமூகமே ஆளாகி எல்லா முறையிலும் பாத்திக்க பட்டு வருகிறது.
நம்மை தாக்கும் பலவித கொடிய நோய்களை கட்டுப்படுத்தியும், அது போல் இனி வராமல் தடுப்பதற்கும், மருத்துவ உலகம் பல நிலைகளில் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தொடர்ந்து பாடுபட்டு கொண்டே இருக்கிறது.
நம் முன்னோர்கள் எல்லா காலத்திலும் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரும்
ஆரோக்கியமான
வாழ்வை வாழ்வதற்கு
உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முழக்கத்தை மேற்கொண்டனர்.
நோய்களை கட்டுப்படுத்தவும், வந்த நோய்களில் இருந்து அதை குணப்படுத்தவும் மற்றும் நோயே வராமல் தடுக்கவும், உணவு முறைகள் மூலமே ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும் என்று சொன்னது மட்டும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டி சென்றனர்.
அப்படி இருக்கையில் எளிய முறையான உணவு முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் நாம் எதற்கெடுத்தாலும் மருந்து என மருந்தை மட்டுமே நம்பி வாழ்வது இன்று வாடிக்கையாகி விட்டது.
நாம் வாழும் உலகம் பஞ்ச பூதங்களான காற்று, நீர், நெருப்பு, மண்,மற்றும் ஆகாயம் ஆகிய சக்திகளால் எப்படி இயங்குகிறதோ நமது உடலும் பஞ்ச மூலக சக்திகளால் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
நமது உடலில் உள்ள அந்த சக்தி ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுவது தான் நோய் என்ற வேதனையாகவும்.
உடலில் நோய், வலி, போன்ற குறைகள் உண்டாகாமல்.வாழ்வதற்கும் ,
உண்டான நோய்களுக்கு,
நாம் உண்ணும் உணவு மூலமாக தீர்வ்வுகளை சொல்லியும் சென்று உள்ளனர்.
இதனை நாம் கடைபிடிக்கும் பொழுது பின் விளைவுகள், பக்க விளைவுகள் போன்ற தொல்லைகள் எதுவும் ஏற்படாமல் அவர் நிவாரணம் பெற்று வாழ்ந்திட முடியும்.
அவைகளில் சிலதை சமூக நீதி முரசின்
வாசக அன்பர்களும் நினைவு படுத்தி வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுவதே இந்த கட்டுரை ஆகும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும்
மஞ்சள்….
வெறும் பாலைக் குடிக்காதே… அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டு அப்பத்தாக்கள்.நானிமார்கள்.
அம்மம்மாக்கள்.தாதிமாக்கள்.
ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம்.
ஆனால் பல நோய்களுக்குக் நிவாரணம் மஞ்சள் பால்.
இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். ஏராளம்.
. மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் இது குறைக்கும்.
இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தொண்டை கரகரப்பு போன்றவை உடனடியாக கிடைத்து
உடல் வெப்பமும் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
மஞ்சள் கலந்த பால் கீழ்வாதத்தை குணமாக்கும். முடக்கு வாதத்தின் காரணமாக உண்டாகும், வீக்கத்தையும் குறைத்து. தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்தும் அதன் வளைவுத் தன்மையை அதிகரிக்கும்.
முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்.
இதை தினமும் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாகும். தோல்களில் எங்காவது புள்ளிகள், சொறி, சிரங்குகள் இருந்தால், மஞ்சள் கலந்த பாலில் பஞ்சை நனைத்து தடவினால் விரைவில் குணமாகும்.
. மஞ்சள் கலந்த பால் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும்
ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்வு தரும். நிணநீர் மண்டலம் மற்றும் ரத்தநாளங்களைச் சுத்தப்படுத்தி, அதிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
இது, பைட்டோஈஸ்ட்ரோஜெனை (Phytoestrogens) உற்பத்தி செய்து, ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். அத்துடன் பெண்களின் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.
மஞ்சளுக்கு வலியைக் குறைக்கும் தன்மை அதிகம் இருப்பதால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் கடுமையான வயிற்றுவலியைத் தடுக்கும்.
கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் தொடர்ந்து மஞ்சள் கலந்த பாலைக் குடித்துவருவது நல்லது.
.மஞ்சள் கலந்த பால், அழற்சி எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதனால் வயிற்றில் புண், உடல்வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலிகளில் இருந்தும் நிவாரணம் பெற முடியும்.
செரிமான மண்டலத்தைச் சிறப்பாக இயங்கச் செய்யும்..
. எலும்புகள் வலுவாக, உதவும். ஆஸ்டியோபொரோசிஸ், எலும்புத் தேய்மானம் ஆகியவற்றில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
அல்சைமர் (Alzheimer) நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மஞ்சள் பாலை தொடர்ந்து பருகிவந்தால், நோயின் தீவிரம் குறையும்.
#மஞ்சள் #பால் #செய்முறை :
ஒரு கிளாஸ் பாலில் 1/4 டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து பாலை நன்கு கொதிக்கவிடவும். பின்னர் பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்தால், மேற்கண்ட பலன்களைப் பெற்றிடலாம்.
ஒரு முறை இந்தப் பாலை குடித்ததும், ஒரு சிலருக்கு உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டால் உடனே குடிப்பதை நிறுத்துவது நல்லது. ஒவ்வாமையால் சிலருக்கு இப்படி ஏற்படலாம்.
இந்தப் பாலை அளவுக்கு அதிகமாகக் குடித்தால், சிலருக்கு உடல் உஷ்ணமாகி வயிற்றுப்போக்கு, தலைவலி, ஏப்பம், அஜீரணம், பித்தப்பைச் சுருக்கம், நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகலாம்.
.கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளில் மஞ்சள் கலந்த பாலை அதிக அளவில் அருந்தினால், கருப்பைச் சுவர் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
நாள் ஒன்றுக்கு ஒரு கிளாஸ் அளவுக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை நினைவில்கொண்டு அளவோடு குடிப்பது உடலுக்கு நல்லது.
சீதளபேதி.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி
குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
உடல் வலி.
* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி, அதனுடன் கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.
மூளை .
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டை புண் குணமாகும்
இப்படி இன்னும் நிறைய.,
சமையல் அறை மருத்துவம் தொடரும்… இன்ஷா அல்லாஹ்……